புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவி கண்ணகி!! நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது யார்?

யாராவது ஒரு கிழவி என்னுடன் தொலைபேசியில் கதைத்தாலே எனது மனிசி தான் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குறிப்பாக தேங்காய் துருவிக்கொண்டிருந்தால் அதை நிறுத்திவிட்டு அமைதியாக நான் என்ன கதைக்கின்றேன் என கேட்டுக் கொண்டு நிற்பாள். அந்த அளவுக்கு என்னில் அவளுக்கு அம்மிச்சம்…

இது எனக்குகு மட்டுமல்ல… பெரும்பாலான அப்பாவி ஆண்களுக்கு இந்த நிலைதான். ஆனால் பல்கலைக்ககழக கல்விமான்கள், அரச அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சாதாரன அரசியல்வாதிகளான பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்களாகவும் இருப்பவர்களின் மனைவிமார் உண்மையில் கண்ணகிகளே…புருசன்மார் எத்தனை மாதவிகளுடன் கட்டிப்புரண்டு படுத்து எழும்பினாலும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த புருசன்மாருடன் லீலைகள் புரிந்த பெண்களால் புருசன்மாருக்கு ஆபத்து ஏற்பட்டால் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டாளுகள்….

செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், மன்று வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள்  கலைப்பீடாதிபதியாக சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக  தற்காலிக துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை , அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையிலையே ,  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

குறித்த 14 பேரில் , சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை  மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு  எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குறித்த வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x