கிளிநொச்சியில் 23 வயதான சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில், 23 வயதுடைய இளைஞன் சிவகுருநாதன் சாரங்கன் அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகரைச் சேர்ந்த இந்த இளம் உயிரிழப்பு, அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

