வவுனியாவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முன்னாள் போராளி சுட்டுக் கொலை!!
வவுனியா வடக்கில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

