புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் இலங்கை தமிழரான தவராஜாவுக்கு அடித்த 126 கோடி ரூபா அதிஸ்டம்!!

கனடாவின் ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் தமிழ் சகோதாரர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் வெற்றியீட்டியுள்ளனர்.

யோகராஜ் பொன்னுத்துரை, தவராஜா பொன்னுத்துரை மற்றும் அருள்வதனி உதயகுமார் ஆகிய சகோதர சகோதரிகளே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இணைந்து சுமார் ஒரு வருடமாக லொட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறார்கள்.

“நான் எங்கள் டிக்கெட்டுகளை சரிபார்க்க கடைக்குச் சென்றேன், நாங்கள் 5 மில்லியன் டொலர்களை ( இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 126 கோடி ரூபா) வென்றதைக் கண்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன்,” என்று டொராண்டோ நகரத்தில் உள்ள OLG பரிசு மையத்தில் தங்கள் பணத்தை எடுக்கும்போது தவராஜா கூறினார்.

தவராஜா தனது சகோதரியை உடனடியாக அழைத்ததாகவும், அவர்கள் வெற்றி பெற்றதை அவரால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.

“அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னால் செயல்பட முடியவில்லை,” என்று அருள்வதனி கூறினார்.

“நான் கொஞ்சம் அழுதேன், அதிர்ச்சியில் தரையில் விழுந்தேன்,” என்று மற்றைய சகோதரர் கூறினார்.

அந்தப் பணத்தில், அருள்வதனி ஒரு புதிய காரை வாங்கவும், அதைத் தன் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளவும், தன் மகனின் கல்விக்கு உதவவும் திட்டமிட்டுள்ளார்.

யோகராஜாவும் தனது குடும்பத்திற்கு உதவி செய்வதுடன், எதிர்காலத்தில் ஒரு வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளார். தனது மகனுக்கு புதிய கார் வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

“நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் – லொட்டரியை வெல்லும் அதிர்ஷ்டம் எமக்கு இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன்” என்று தவராஜா கூறினார்.