புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு மாயனத்தில் வெட்டு காயங்களுடன் ஆண் ஒரு சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள மயானத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகு எருவில் பிரதேசத்தினை சேர்ந்த க.இராதாகிருஸ்ணன் என்ற 65வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுவதுடன் அருகில் நச்சு பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் எவ்வாறு இங்கு வந்தார் எதனால் மரணம் ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.