புதினங்களின் சங்கமம்

யாழ் அராலி கிழக்குப் பகுதி சுற்றிவளைப்பு! பத்துப் பேர் கைதாகி எண்மர் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் பத்துப் பேர் கைது செய்யப்பட்ட நிலையில் எண்மர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் இராணுவத்தினரும் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து இன்று அதிகாலை தொடக்கம் மதியம் வரையில் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வாள்கள் உட்பட்ட ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தின் போது பத்துப் பேர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் எண்மர் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இருவரிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த தேடுதல் நடைபெற்றதாகவும் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வாள்வெட்டு வன்முறைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.