மாவட்டசெயலகங்கள், பிரதேசசெயலகங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது!!
இன்று வெளிவந்த விசேட வர்த்தமானியின்படி மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேசசெயலகங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது உள்நாட்டு அலுவல்கள் அலுவலகம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுபாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசஅதிபர் மற்றும் மாவட்ட அலுவலர்களை அச்சுறுத்தி வந்த அரசியல்வாதிகளுக்கு கோத்தபாயாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

