மட்டக்களப்பு கோப்பாவெளியில் துணிக்குள் சுற்றியபடி காணிக்குள் கிடந்த ஆண் குழந்தை!! (photos)
இன்று (05/04/2020) காலை 5.30 மணியளவில் கோப்பாவெளி தும்பாலஞ்சோலையில் உள்ள விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையின் அழுகை குரல் கேட்டு அந்த இடத்துக்கு சென்ற வயதான தாய் ஒருவரால் மீட்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்ததன் அடிப்படையில் குழந்தையை பொலிசார் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டிமூலம் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் குழந்தையின் தாய் கண்டுபிடிக்கப்பட்டு கரடுயனாறு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.




