புதினங்களின் சங்கமம்

எனது கணவர் எனது அம்மாவுக்கும் கணவர்!! 15 வயதில் நடந்த சம்பவம்!! பெண்ணின் வாக்குமூலம் இதோ!!

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பு இரண்டாவதாக வேறொருவரைக் காதலித்து அவரைத் திருமணம் செய்துள்ள பெண், தனது கணவர் தனது தாயின் கணவர் என்று கூறியுள்ளது பொலிசாரை அதிர வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த சமையல்காரரான ரமேஷ். இவருக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குடும்பத்தின் வறுமையின் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார் ரமேஷ்.

இந்நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தனது குடும்பத்தினை அவதானிக்க வந்துள்ளார். அப்பொழுது இரண்டு குழந்தைகளையும் உள்ளே பூட்டிவைத்துவிட்டு ப்ரீத்தி வெளியே சென்றுள்ளார்.

இரவு வீட்டிற்கு திரும்பிய ப்ரீத்தியிடம் எங்கே சென்று வருகிறாய் என்று கணவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுடன் வாழ விருப்பமில்லை நான் தனியாக வாழப்போகிறேன் என்று ஆரம்பித்த சண்டை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. பின்பு மனைவியை சமாதானப்படுத்தி வாழ்வதற்கு கணவர் அழைத்தும் வரமுடியாது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், பிரீத்தி இளைஞர் ஒருவருடன் தனியாக வசித்து வருவதாக ரமேஷூக்கு தகவல் கிடைக்க, உடனே அதிர்ச்சியடைந்த அவர் மகளிர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். பின்பு தான் தெரியவந்துள்ளது ப்ரீத்திக்கு 26 வயது இளைஞரான ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் எஸ்பியிடம் புகாராக தெரிவித்துள்ளார் ரமேஷ். ப்ரீத்தி விசாரித்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ப்ரீத்தி கூறுகையில், நான் ரமேஷை முறையாக கல்யாணம் செய்யவில்லை. அந்த நேரத்தில் எனக்கு 15 வயதுதான் ஆகியதால் எனது அம்மாவின் சான்றிதழ், புகைப்படம், அவரது பெயரைக் கொடுத்து தான் திருமணம் நடந்தது என்றும், அவர் சட்டப்படி சட்டப்படி என் அம்மாவையே திருமணம் செய்துள்ளார். அவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளுக்கு நான் தாயானாலும், இப்போது அகிலுடன் செய்து கொண்ட திருமணம் தான் சட்டப்படி செல்லும் என்றும் அதனை சட்டப்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கணவன், மனைவி மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள அப்பாவியான குழந்தைகள் என்னசெய்வது என்று விழித்துக்கொண்டுள்ளார்களாம்.