புதினங்களின் சங்கமம்

மகளை A/L பரீட்சைக்கு ஏற்றிவிட்டு திரும்பிய குடும்பஸ்தர் வாள் வெட்டுக்கு இலக்காகி பலி!

அநுராதபுர தலைமையக பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் அடையாளம்
உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x