மட்டு’வில் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பெண மரணம்!
மட்டக்களப்பு, காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி மாலை 5:15 மணியளவில் பொருட்கள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், அப்பெண் காயமடைந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதிப் பெரியவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக மீட்கப்பட்ட மூதாட்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதலை நடத்திய நபர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





