புதினங்களின் சங்கமம்

2 பெண்களை திருமணம் செய்த வைத்தியர்…இறப்பின் பின் வெளிவந்த இரகசியம். சடலத்தை ஏற்க மறுக்கும் இரு மனைவிமார்கள்….

பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றிய 49 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிரபாத் அனுருத்த தயாரத்னவின் திடீர் மரணம், மருத்துவத் துறையிலும் சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கினிகத்தேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பின்னர் பதுளையில் வசித்து வந்ததுடன், கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவராகவும் விளங்கினார். 1998-1999 காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைந்து மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவர், பின்னர் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 23ஆம் திகதி வழமைபோன்று பதுளை போதனா மருத்துவமனைக்குச் சென்ற டாக்டர் தயாரத்ன, காலை 10 மணி வரை அறுவை சிகிச்சை கூடத்தில் இடம்பெற்ற முக்கியமான சிகிச்சையொன்றில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அதன் பின்னர் எவருக்கும் அறிவிக்காமல் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கிடைக்காததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவரது கார் தனிமையான பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் பூட்டப்பட்டிருந்த நிலையில், மருத்துவர் அதில் இருக்கவில்லை.

இதையடுத்து பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் அருகிலுள்ள காட்டுப்பகுதியிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாறை ஒன்றின் மீது மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அருகில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் காணப்பட்டதாகவும், அதிகளவு மருந்துகளை உட்கொண்டதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போதுதான் மருத்துவரின் தனிப்பட்ட வாழ்க்கை விடயம் ஒன்று தெரிய வந்துள்ளது

மருத்துவரின் மரணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளிப்பட்டுள்ளன.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது சட்டப்பூர்வ மனைவி ( அவரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஒரு மருத்துவராவார். ) சம்பவ இடத்திற்கு வந்திருந்த நிலையில், மற்றொரு இளம் பெண்ணும் ஒன்றரை வயதுடைய குழந்தையுடன் அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர் அந்த இளம் பெண்ணுடனும் நீண்டகாலமாக தனியாகக் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த இரண்டு பெண்களின் வருகையையும் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிக்கலானதுமான சூழல் உருவாகி உள்ளது .

மருத்துவரின் மர்ம மரணத்தால் அதிர்ச்சியடைந்திருந்த அவர்கள் இருவரும், கணவரின் சடலத்தைப் பொறுப்பேற்க மறுத்தனர். அந்த இரு பெண்களும் இதில் பிடிவாதமாக இருந்துள்ளனர் ..

இறுதியாக, அங்கு வந்திருந்த மருத்துவரின் தந்தை தனது மகனின் உடலைப் பொறுப்பேற்க முன்வந்தார்

இறுதி நேரத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் உரையாடல் ஒன்று ,

பொலிஸ் விசாரணைகளில் மற்றுமொரு உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் காரை செலுத்திச் சென்றபோது, அவர் தனது சட்டப்பூர்வ மனைவியுடன் வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவரது வேகமான வாகனம் ஓட்டுவதை பார்த்த மனைவி, “ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அவர், “நான் செல்லும் இடத்தைச் சொன்னால் நீங்களும் என்னைத் தேடி வருவீர்கள்” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து பார்க்கும்போது வெற்றிகரமான வாழ்க்கையை வாழும் ஒருவருக்குள் எத்தகைய மனப்போராட்டங்கள் இடம்பெறுகின்றன என்பதை எப்போதும் அறிந்துகொள்ள முடியாது.

எனவே, கடுமையான மன அழுத்தம் அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் எவரும் தனிமையில் அவற்றைச் சமாளிக்காமல், நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது தகுதியான மனநல நிபுணரின் உதவியை நாடுவது அவசியமாகும்.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. ஒரு நெருக்கடியான தருணம் நிரந்தரமான முடிவை எடுக்க வேண்டிய காரணமாக மாறக்கூடாது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x