மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மரணம்!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (61), சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) பிற்பகல் காலமாகியுள்ளார்.
1965ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி பிறந்த அவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல ஊடகங்களில் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

