சுவிஸ்லாந்திலிருந்து திருமண நிகழ்விற்காக வந்த குடும்பப் பெண் ரஞ்சனி யாழில் மரணம்!
யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த புண்ணியமூர்த்தி ரஞ்சினி எனும் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

