கிளிநொச்சியில் 50 லட்சத்திற்கு கோவிலில் ஏலத்திற்கு மாம்பழம் வாங்கிய குடும்பம்! சந்தனம் மெத்தி அங்கு தடவுகின்றார்கள்!
கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது. விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து குறித்த தொகையினை ஏலத்தில் பெற்றனர். கோவில்களில் இலட்சக் கணக்கில் செலவு செய்பவர்களில் பலர் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தின் மூலம் தங்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதற்காக பல கோவில்களில் இவ்வாறான திருவிளையாடல்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

