தயாளினியின் மகள் சுவஸ்திகாவும் போதைக்கு அடிமை!! ஒவ்வொரு நாளும் ஓட்டைப் பிரித்து போதைப் பொருள் கொடுத்து உடலுறவு கொண்ட திவாகர்!
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தயாளினி திலீபனின் மகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர் எனவும் போதைப்பொருளுக்கு அடிமையான திவாகருடன் சேர்ந்து தாயாருக்கு தெரியாது கள்ளத்தனமாக ஓடிச் சென்று திருட்டுத்தனமாக பதிவுத்திருமணம் செய்த வாழ்ந்தார்கள் எனவும் தனது மனைவி தன்னை விட போதைக்கு அடிமையானவள் என திவாகர் தனது மற்றொரு போதைப்பொருளுக்கு அடிமையான நண்பனிடம் தெரிவித்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் எமது புலனாய்வுச் செய்தியாளர்களுக்கு கிடைத்துள்ளன. திவாகர் தனது போதைக்கு அடிமையான உற்ற நண்பனிடம் தெரிவித்த கருத்துக்கள் தற்போது அவனது ஏனைய நண்பர்கள் மூலம் வெளியே வந்துள்ளது.
திவாகரிடமிருந்து மகளை கட்டாயப்படுத்தியே தயாளினி பிரித்து வைத்திருந்துள்ளார். அத்துடன் சுமந்திரனின் துணையுடன் உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் மகள் தயாளினியின் கட்டுப்பாட்டில் அச்சுறுத்தப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்டிருந்துள்ளார். கட்டாயத்தின் நிமிர்த்தமே விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கணவன் திவாகர் அவனது மற்றொரு கஞ்சா டீலரான நண்பனுக்கு தெரிவித்துள்ளான். அத்துடன் தான் அடிக்கடி அவளை ஓட்டைப் பிரித்து நள்ளிரவில் சந்தித்து வந்ததாகவும் அவளுக்கு தேவையான போதைப்பொருளை அந்த நேரத்தில் கொடுத்து வந்ததாகவும் அவன் தனது நண்பர்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளான்.
திவாகர் இவ்வாறு சுவஸ்தியாவை சந்திக்க சென்ற அன்றைய இரவு நித்திரையில் இருந்த தாயார் தயாளினி் இவர்களை கையும் மெய்யுமாக பிடித்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக தமது குட்டுக்கள் வெளிப்பட்டுவிட்டுவிட்டன என அறிந்து சுவஸ்திகாவும் திவாகரும் தாயார் தயாளினியை கொலை செய்திருக்கலாம் எனவும் திவாகரின் நட்பு வட்டாரங்களின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை நேற்று திவாகரின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் திவாகரின் நவீனரக மோட்டார் சைக்கிளை கைப்பற்றிக் கொண்டு சென்றுள்ளார்கள். படத்தில் காட்டப்பட்டுள்ளது குறித்த மோட்டார் சைக்கிள்.
இதே வேளை திவாகரை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிசார் திவாகரின் மனைவியான தயாளினியின் மகள் சுவஸ்தியாவை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தினார்களா? என சமூகவலைத்தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


