புதினங்களின் சங்கமம்

நீதிமன்ற அவமதிப்பு என்றால் என்ன? அதற்கு என்ன தண்டனை ?

1.நீதிமன்ற அவமதிப்பு என்றால் என்ன? இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பதம் சரியாக எந்த சட்ட நூல்களிலும் சரியாக வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை. ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசேட சட்டத்தின் பிரிவு 2(அ) குடியியல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகவும் 2(ஆ) குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலும் விளக்கம் தருகிறது .

நீதிமன்ற உத்தரவை மீறுதல் ,நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தடையாக இருத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை பாரபட்சமான முறையில் விமர்சித்தல் அல்லது பதிவிடுதல் (அச்சு மற்றும் இலத்திரனியல் பதிவுகள் உள்ளடங்கும்) போன்றன நீதிமன்ற அவமதிப்புகளாகும்

2.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழக்கை முன்னெடுக்கும் நியாயாதிக்கம் எந்த நீதிமன்றகளுக்கு உண்டு ?

இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பின் 105(3) பிரகாரம் உயர்நீதிமன்றம் (Supreme Court) மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு (Court of Appeal )நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க முடியும்.

3. நீதிமன்ற அவமதிப்புக்கு என்ன தண்டனை?
அரசியலமைப்பு 105(3)மற்றும் நீதிமன்ற அவமதிப்பு விசேட சட்டம் section 16என்பனவற்றின் பிரகாரம் ஆறு வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டையும் வழங்க முடியும் .

இருப்பினும் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளியை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் எப்போதும் விடுதலை செய்ய முடியும்.

ஒருவர் ஞானதேரர் என்னும் புத்த பிக்கு
இன்னொருவர் பிரதி அமைச்சர் பாலித்த பெரும

இருவருமே சிங்களவர்கள்
இருவருமே நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்.

ஆனால்,
ஞான தேரர் என்னும் பிக்கு கைது செய்யப்படவில்லை
பிரதி அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏன் இந்த பாகுபாடு?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால்
இருவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

ஏனென்றால்,
ஞானதேரர் நீதிமன்ற உத்தரவை மீறியது தமிழருக்கு எதிராக. எனவே அது கண்டு கொள்ளப்படவில்லை.

பிரதி அமைச்சர் பாலித்த பெரும நீதிமன்ற உத்தரவை மீறியது ஒரு தமிழனுக்காக. அதனால்தான் அவர் சிங்களவராக மட்டுமல்ல அமைச்சராக இருந்தபோதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஞான தேரருக்கு எப்படி இந்த துணிவு வந்தது?

எற்கனவே நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 19 வருட சிறைத் தண்டனை பெற்றவர் இந்த ஞான தேரர். ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவருக்கு பொது மன்னிப்ப வழங்கி உடன் விடுதலை செய்தார்.

அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் தைரியமாக நீதிமன்றத்தை அவமதிக்கிறார். தைரியமாக நீதிமன்ற உத்தரவை மீறுகிறார்.

இதில் கேவலம் என்னவென்றால் தமிழருக்கு எதிராக செயற்படும் இந்த இனவாத பிக்கு ஞானதேரரை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரு தமிழ் தலைவர்கூட பாலித பெருமவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரவில்லை.

சரி. இப்போது இதில்
நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன?

ஒரு சாதாரண விடயத்தில்கூட இந்த புத்த பிக்குகள் நீதிமன்றத்தையோ சட்டத்தையோ மதிக்க தயாரில்லை என்பதை காட்டியுள்ளார்கள். இலங்கை அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது.

எனவே இவர்களிடத்தில் எப்படி இனப்படுகொலைக்குரிய நீதியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்? அல்லது இனப் படுகொலைக்கான நீதியை வழங்குவார்கள் என நம்ப முடியும்?

Image may contain: one or more people, outdoor, nature and text