வவுனியாவில் பொம்பிளைக் கள்ளன் திலக்சனை காதலித்த யுவதி கடிதம் எழுதி வைத்துவிட்டு பலி!
வவுனியா கணுசுபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிவானந்தராஜா திலக்சாய் என்பவர், பல வருடங்களாக வவுனியா மகாரம்பைக்குளம் பாடசாலை வீதி நான்காம் ஒழுங்கையில் வசித்து வரும் அருணகிரிநாதன் திலக்சன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் வேறொரு பெண்ணுடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த மாணவி நேற்றைய முன்தினம் அலரி விதைத் தெளிவை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவி எழுதிய கடிதம்:
இது தொடர்பாக உயிரை மாய்த்த மாணவி எழுதிய கடிதத்தில்:
“அப்பா, சத்தியமாக மன்னித்து விடுங்கள் அப்பா. நான் எல்லோரும் சொன்னபோது எல்லாம் நம்பவில்லை. அவன் வேண்டுமென்றுதான் இருந்தான். எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட அதிகமாக அவனைப் பிடிக்கும் அப்பா.
நான் அவனுக்காக உங்கள் எல்லோரிடமும் நிறைய பொய் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டான். அவன் பொய் சொன்னால் கூட அதனை நான் நம்பியிருக்கின்றேன். அவன் இத்தனை வருடம் இருந்தான், இனியும் இருப்பான் என்று நம்பினேன். அவனைத் தவிர யாரோடும் நான் போனது இல்லை அப்பா.
அவனை ஒரு பிள்ளை காதலிக்கிறது என்று கூட அவன்தான் சொன்னான். அவளுடன் பேசமாட்டேன் என்று என் மேல் சத்தியம் எல்லாம் பண்ணினான். நான் அவனை எல்லாவற்றையும் விட நம்பினேன், எப்போதும் ஏமாற்றமாட்டான் என்று. என்னுடைய நம்பர் எல்லாம் பிளாக் (Block) பண்ணிவிட்டு அவளுடன் பேசத் தொடங்கிவிட்டான்.
இந்த வருடத்துடன் ஏழு வருடம் அவன்தான் என்றும் முடிவு செய்து, அவனைத் தாண்டி இன்னொரு வாழ்க்கை வேண்டாம். அவன் இல்லாமல் இருக்கவும் மாட்டேன். அவனை நான் எப்போதும் ஏமாற்றக்கூடாது என்று நினைத்தேன். நான் அவனை கடைசி மட்டும் நம்பினேன். என்னை ஏமாற்றுவான் என்று நினைக்கவே இல்லை.
அவன் இல்லாமல் நான் இருக்கமாட்டேன். அவன் அவனுக்குப் பிடித்த மாதிரி இருக்கட்டும். நான் இருந்தவரைக்கும் அவனைச் சந்தோஷமாகத்தான் வைத்திருந்தேன்.
அமு (Amu), நான் உன்னை ஏமாற்றவில்லை, நீதான் ஏமாற்றிவிட்டாய். என் மேல், உனது அம்மா மேல் கூட சத்தியம் பண்ணினாய் அவளுடன் கதைப்பதில்லை என்று. உன்னை நம்பினேன், ஏமாற்றிவிட்டாய் தானே? என்னால் உன்னை வேறொரு பெண்ணுடன் பார்க்க முடியாது. நான் போகிறேன். நீ நல்லா இரு, சந்தோஷமாக இரு. ஏமாற்றுகிறது நீ என்றால் எப்பவோ போயிருக்கலாம்.
அப்பா, அம்மா, அண்ணா… உங்களை நினைக்காமல் இந்த முடிவு எடுத்துவிட்டேன். அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்.” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




