யாழில் அருன்சித்தார்தின் நெருங்கிய பெண் உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது!
இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாள்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அவளிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவள் போதைப்பொருள், விபச்சாரம் போன்ற செயற்பாடுகளில் பெண்களை ஈடுபடுத்தும் காவாலியான அருன்சித்தார்துக்கு நெருக்கமானவள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

