புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் சிறைக்குள் இருந்த புருசனுக்கு போதைப் பொருள் கொடுத்த புதுமையான பொண்டாட்டி!!

வவுனியா சிறைச்சாலைக்கு ஜஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற பெண்னோருவரை வவுனியா
பொலிஸார் நேற்று (31) மதியம் 1.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவர் வவுனியா
சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். சிறைச்சாலையிலுள்ள கணவரை
பார்வையிடுவதற்காக நேற்று மதியம் குறித்த பெண் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

சிறைச்சாலைக்கு சென்ற சமயத்தில் ரிசேட் உடையினுள் 4கிராம் ஜஸ் போதைப்பொருளை வைத்து
கணவருக்கு வழங்க முற்பட்ட சமயத்தில் சிறைச்சாலை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து
வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் நேற்று
மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த பெண்ணை
இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.