புதினங்களின் சங்கமம்

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் சிக்கினர்!

கொழும்பு – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் நீண்ட காலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒன்பது தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில்,

பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்திய பிரஜை போன்று மசாஜ் நிலையத்துக்குள் சென்று தகவல்களை திரட்டி பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பல வர்த்தகர்கள் இந்த விபச்சார விடுதிக்கு வருகை தருவதாக மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x