கிளிநொச்சியில் தனது தாய், சகோதரன் மீது வாள் வெட்டு நடாத்தி படுகாயப்படுத்திய மகன்!!
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன். நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

