நல்லுார் கோவிலுக்கு முன்னால் தென்பகுதி நிறுவனத்தின் இறைச்சி சாப்பாட்டுக் கடை திறக்கப்பட்டது!! அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்களா??
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயச் சூழலில் அசைவ உணவகங்கள், மதுபானச்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதுவரைகாலமும் அந்த நடைமுறையை யாழ்ப்பாணம் மாநகரசபை கடைப்பிடித்து வந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னாலே ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது. அதற்கு யாழ் மாநகரசபையும் அனுமதி வழங்கியிருக்கிறதா? அல்லது எல்லாம் திறந்த பின் என்ன கடை என்பதை ஆராயலாம் என மௌனமாக இருக்கின்றதா?
தயவு செய்து இந்த விடயத்தில் யாழ் மாநகரசபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். றோட்டோரம் வடைவிற்கும் சாமானியனிடம் வீரம் காட்டும் மாநகரசபை இவர்களிடமும் தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்குமா?






