புதினங்களின் சங்கமம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தூக்குத்தண்டனை!

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பொல்காவலை போராவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதான பட்டகொல்லே கேதர நிஷ்சங்க விஜேவீர என்பவரை வெட்டி கொலை செய்து, 58 வயதான ஆரியதாச என்பவரை கற்களால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதாக மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

போரவத்தை பகுதியை சேர்ந்த புல்ஹித் தேவாலகே விக்ரமபால, புல்ஹித் தேவாலகே செனரத் சமரசிங்க, புல்ஹித் தேவாலகே பிரதீப் சஞ்சீவ ஜயரத்ன ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.