புதினங்களின் சங்கமம்

யாழில் அதிக துாக்க மாத்திரை உட்கொண்டு 17 வயது சஞ்சிகா பலி!!

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் நேற்றையதினம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்கண்ணா சஞ்சிகா என்ற 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி கடந்த 20ஆம் திகதி தவறான முடிவெடுத்து அதிக மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது பெற்றோர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.