90 கி.மீ வேகத்தில் பறந்து புரண்ட இளங்குமரன் எம்.பியின் கார்! ஆசுப்பத்திரியில் வடிவேலு போல் கிடந்த இளங்குமரனைப் பார்த்து சிரித்த பிரதமர்! நடந்தது என்ன?வீடியோ
சிங்கள மக்களின் நலன்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஊழல் அற்ற கட்டுப்பாடான போராளிக் குழு எனப் பெயர் எடுத்த ஒரு கட்சியின் ஆட்சியில், அந்தக் கட்சி ஊடாக நாடாளுமன்றம் சென்றவர் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன். அவரது செயற்பாடுகள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அண்மையில் சுண்ணக்கல் அகழ்வு தடுத்து நிறுத்த முற்பட்டமை போன்ற சில செயற்பாடுகள் அவரை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைத்திருந்தன.
நேற்று பூநகரி – யாழ வீதியில் தனங்களப்பு சந்தியில் இளங்குமரனின் கார் விபத்துக்குள்ளானது. வீதியின் நடுக் கோடு தொடராக ஒரு கோடா இருந்தால் அந்த கோட்டை தாண்டி எந்த ஒரு வாகனத்தையும் கடக்க முடியாது. ஆனால் எதிரே ஏதாவது வாகனங்கள் வராது இருந்தால் அல்லது சந்திகள் , முச்சந்திகள் மற்றும் ஏதாவது தடங்கல்கள் இல்லாது இருந்தால் முன் செல்லும் வாகனம் இடம் கொடுத்தால் மாத்திரமே வாகனத்தை விலத்தி கடக்கலாம். வீதியின் நடுவே இரட்டைக் கோடுகள் போடப்பட்டிருந்தால் ஒரு போதும் முன் செல்லும் வாகனத்தை விலத்திச் செல்லக் கூடாது. இதுதான் வீதிக் கட்டுப்பாட்டு நடைமுறைகள். அத்துடன் வீதியின் ஓரங்களில் எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் செல்லலாம் என போட்டிருக்கும் அடையாளக் குறிகளைக் கவனித்து வாகனங்களை ஓட்டுதல் வேண்டும். பூநகரி – யாழ் வீதியில் எந்த ஒரு இடத்திலும் 70 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடியவாறான எந்தவொரு குறியீடுகளும் இடப்படவில்லை. ஆனால் இளங்குமரனின் கார் 90 கி.மீற்றர் வேகத்தில் சென்று வீதியின் நடுக்கோடு குறியீட்டையும் தாண்டி முன்னால் சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துத் தொடர்பான CCTV காட்சிகள் தனங்களப்பு சந்திக்கு அருகில் உள்ள பிள்ளையார் ஸ்ரோஸ் கமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் படி குறித்த கடை தனங்களப்பு சந்தியிலிருந்து 57 மீற்றர்கள் துாரத்தில் உள்ளது. அந்த கடையைத் தாண்டிய சிறிய பாரவூர்தி 4 செக்கன்களுக்குள் குறித்த சந்தியை அடைகின்றது. ஆனால் இளங்குமரனின் கார் 2 செக்கன்களுக்குள் சந்தியை அடைந்து விபத்துக்குள்ளாகின்றது. இந்த கணிப்பின்படி இளங்குமரனின் கார் 90 கி.மீ வேகத்தில் தனங்களப்பு சந்தியை நோக்கிப் பாய்ந்துள்ளது. அவர் காரில் பயணம் செய்து விபத்துக்குள்ளான போது அவர் வீதிக்கட்டுப்பாடுகளை மீறிச் சென்றுள்ளமை அவதானிக்க முடிகின்றது. மக்கள் பிரதிநிதியே வீதிக் கட்டுப்பாடுகளை மீறிப் பயணம் செய்யும் போது சாதாரண சாரதிகள் வீதியில் அதி வேகமாகச் செல்வதை எவ்வாறு சுட்டிக்காட்ட முடியும்.?
அநுராதபுரத்தில் வீதி ஒழுங்குளை மீறிச் செயற்பட்ட அர்ச்சுனா எம்.பியைப் போல் இளங்குமரன் எம்.பியும் வீதி ஒழுங்குகளை மீறிச் செயற்படலாமா?
ஒரு வாகனம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றால் எதிரே ஏதாவது தடை வந்தால் அதை அவதானித்து அந்த வாகனத்தை சாரதி நிறுத்துவதற்கிடையில் அந்த வானம் கிட்டத்தட்ட 60 அடிகள் சென்றுவிடும். சாரதியின் கண்களுக்கும் மூளைக்கும் மூளை செயற்படும் நேத்திற்கும் அந்த மூளையால் கால்களுக்கு கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் இடைப்பட்ட ஒரு செக்கனுக்கு உட்பட்ட நேரத்தில் வாகனம் கிட்டத்தட்ட 30 அடி துாரம் பாய்ந்து விடும். அதன் பின்னரே வாகனத்தின் பிறேக் அழுத்தப்பட்டு அந்த பிறேக் செயற்பட்டு நிற்கும் போது மேலும் பல அடிகள் வாகனம் இழுபட்டு செல்லும்…
வாகனத்தின் வேகத்தை நிறுத்த முற்படும் போது எவ்வளவு துாரத்திற்கு வாகனம் செல்லும் என்பது தொடர்பான முழுமையான தரவுகள் மற்றும் தகவல்களை கீழே தரப்பட்டுள்ள இந்த இணையத்தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்….
Over-Speeding: One of the way to meet hell. Why is danger? – TAMILIZ News & Articles
இதுதான் பெரும்பாலான சாரதிகளால் உணரப்படாத யதார்த்தம்… இளங்குமரன் சென்ற காருக்கு முன்னால் சென்று சாவகச்சேரி பக்கம் திரும்பும் அந்த சிறிய பாரவூர்தியின் சமிக்கை குறியீடுகள் செய்பட்டு திரும்பியிருந்தால் கூட கட்டாயம் இளங்குமரனின் வாகனம் அங்கு ஒரு மோதலை நிகழ்த்தியிருக்கும்….
அந்த வாகனம் பாரவூர்தியாக இருந்ததால் அந்த வாகனச் சாரதிக்கு உயிர்ச்சேதம் வரவில்லை. இதுவே ஒரு மோட்டார் சைக்கிளாக இருந்து அந்த விபத்து நடந்திருந்தால் இளங்குமரனால் ஒரு உயிரே அல்லது இரு உயிர்களோ கொல்லப்பட்டிருக்கலாம். அதே வேளை அந்த பாரவூர்த்தியுடன் பக்கவாட்டாக மோதியதால் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனின் உயிர் தப்பியது. ஆனால் நேரடியாக மோதியிருந்தால் இளங்குமரன் மட்டுமல்ல… அந்த பாரவூர்தியின் சாரதியின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இரு குடும்பங்கள் நடுத்தெருவில் வந்திருக்கலாம்….. இளங்குமரன் மட்டுமல்ல…. அனைத்து சாரதிகளும் இதனை உணர வேண்டும்…..