யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் தொடர்பாக எச்சரிக்கையாக இருங்கள்!!
இந்தப் பெண் தனக்கு அம்மா, அப்பா, உறவுகள் யாரும் இல்லை. தான் ஒரு அநாதை எனத் தெரிவித்து என்ன வேலை தந்தாலும் செய்கின்றேன் என கூறி வீடுகளில் வேலை செய்கிறாள். அதன் பின் சில நாட்களில் அவ் வீடுகளிலிருந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்வதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மட்டுமல்ல மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களிலும் இவள் கை வரிசை காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் தன்னை அடையாளப்படுத்தி இவள் பல்வேறு வீடுகளில் பெருமளவு நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் இவள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


