தற்போதைய யாழ் அரசஅதிபர் பிரதீபனே பிரமிட் மோசடியின் முக்கிய புள்ளி!!
குளோபல் லைவ் ஸ்ரைல் மற்றும் பல பிரமிட் நெட்வேர்க் மோசடி நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அப்பாவிகளைச் சேர்த்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்களில் முக்கியமானவர் தற்போதய யாழ் அரச அதிபர் பிரதீபனே. பிரதீபன் கோப்பாய் பிரதேசசெயலாளராக இருக்கும் போது குறித்த பிரதேசசெயலகத்தில் கடமையாற்றிய பெருமளவான அப்பாவி ஊழியர்களை காசு ஆசை ஊட்டி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறி குறித்த மோசடி நிறுவனங்களில் சேர்த்துவிட்டுள்ளார், அத்துடன் குறித்த மோசடி நிறுவனங்களின் முகவர்கள் தம்முடன் பிரதீபன் மற்றும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் சில வைத்தியநிபுணர்கள் கூட சேர்ந்துள்ளதாகவும் சில சட்டத்தரணிகளும் தமது நிறுவனத்தின் உறுப்பினர்கள் எனவும் கூறியே அப்பாவிகளை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளார்கள். இவ்வாறான மோசடி நிறுவனத்தின் முக்கிய புள்ளியான பிரதீபன் யாழ் அரசஅதிபராக உள்ளமை தொடர்பாக இப்போதைய அரசு கண்டும் காணாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ் அரச அதிபர் பிரதீபனின் பிரமிட் மோசடி தொடர்பாக அவரது மனைவியின் தங்கையின் கணவனான ருசாங்கன் தனது பேஸ்புக்கில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.



