புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் ஐயருக்கு அடித்தவர்களுக்கு பொலிசார் ஆதரவு!! கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

கிளிநொச்சி பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சிவசேனா அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) மாலை இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அண்மையில் இந்து மதகுரு ஒருவர் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது உருத்திராட்ச மாலை அறுத்தெறியப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி கோரி  கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 தேங்காய் உடைத்து தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அண்மைக்காலமாக ரவுடிகளின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தப் போக்குடன் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்த போராட்டக்காரர்கள்

தாக்கப்பட்டவர் நீதி கோரி பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவருடன் சமரசத்துடன் செல்லுமாறு கோரியுள்ளனர். இது  வேதனையான விடயம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்ட மதகுமார்கள் தெரிவித்துள்ளனர்.

May be an image of temple and text

May be an image of 10 people, temple and textMay be an image of 5 people, temple and text