சீதுவை துப்பாக்கிச் சூடு – தந்தை உயிரிழப்பு!!
கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும்,
காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை
அண்மையில் சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் தந்தை இன்று (06) உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அந்த தாக்குதலில் மகன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
காரில் வந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த குடும்பத்தின் தொழிலதிபர் மகனைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகளுடன் குறித்த தரப்பினர் ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

