முல்லைத்தீவு புளியம்பொக்கனை பாலத்தில் விழுந்து இறந்தவர்களை தெரியுமா? தயவு செய்து பகிரவும்!!
முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்தவர்களை அடையாளம்காண பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று முன்தினம் (31) BGL – 1286 இலக்கம் கொண்ட பஜாஜ் பல்சர் (கறுப்பு, சிவப்பு நிறம்) மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இந்நிலையில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் வேறு விடயங்களை வைத்து அடையாளம் காணக்கூடியவர்கள் இவர்களை அடையாளம்காண உதவி செய்யுங்கள்.
BGL – 1286
Bajaj – Pulsar
Black +Red
சற்று முன் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை நாம் கீழே தந்துள்ளோம்..
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஜெய்க்கா குடியிருப்பில் வசிக்கும் சாந்தன் மற்றும் சிபி எனனும் பெயர்கள் கொண்ட நபர்கள் என #உறுதி செய்யப்பட்டுள்ளது ….









