புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகப்பகுதியில் நடந்த சம்பவத்தால் பெரும் பதற்றம்!! (Photos)

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பற்றைக் காடுகளாக காணப்பட்ட பிரதேசத்திலேயே இந்த தீ பரவியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் காற்று மற்றும் வெயில் காரணமாக தீ வேகமாக பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா நகரசபையின் தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வவுனியா வளாகத்தின் கட்டிடத்தொகுதிக்கு தீ பரவாது தடுக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சேதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இந்த தீ பரவல் சம்பவத்தால் வவுனியா வளாகத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவியவந்துள்ளது.