புதினங்களின் சங்கமம்

சிங்கள பௌத்த துறவிகளின் பாலியல் கொடுமைகள்! கண்ணீருடன் அம்பலப்படுத்தும் பெற்றோர்(Video)

பௌத்த விகாரைகளுக்குள் பாலியல் கொடுமைகள் நடப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

சிரேஷ்ட பௌத்த துறவிகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக ஆதாரங்களுடன் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோருடன் ராஜாங்க அமைச்சரை சந்தித்து நியாயம் கேட்டுள்ளனர்.

மூத்த பிக்குகளால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது, அடிமை போன்று நடத்தவது உள்ளிட்ட பல கொடுமைகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி ஒன்றை ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக விகாரைகளுக்குள் நடக்கும் பல்வேறு மோசடிகளை அமைச்சர் அம்பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.