கோயிலா? சாராயக்கடையா? கிளிநொச்சி நாட்டாமை சிறிதரனின் திருவிளையாடல்!! நடப்பது என்ன?
பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கிளிநொச்சியில் ஒரு குறுகிய காலத்தில் 35 க்கு மேற்பட்ட பார்கள் திறக்கப்பட்டுள்ளன. பார்க்கின்ற இடமெல்லாம் பச்சை நிற பெயர் பலகைகள் காணப்படுகின்றன. பண்பாடு, கலாசாரம், தேசியம் பற்றி அதிகம் பேசுகின்ற எம்பி இந்த சாரயக் கடைகள் விடயத்தில் கடும் மௌனம் காக்கின்றார். சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் மட்டையை பிடித்துக்கொண்டு வீதிக்கு இறங்கும் எம்பி இந்த விடயத்தை கண்டுகொள்ளவேயில்லை.
ஆனால்
ஊற்றுப்புலம் எனும் ஏழைக் கிராத்தில் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் சிதைந்து கிடந்த முருகன் ஆலயம் ஒன்றை பல இலட்சங்கள் செலவு செய்து அமைத்து வருகின்றார். நாலு முட்டாள்கள் அதனை தடுத்து நிறுத்துமாறு எம்பியிடம் சென்ற போது அவரும் ஜேர்மனுக்கு தொலைபேசி எடுத்து ஆலயம் கட்டுவதனை நிறுத்துமாறு தெரிவித்திருக்கின்றார்.
எம்பி சார்….. நீங்கள் சொல்லுங்கோ இதே மாதிரி ஒரு ஆலயத்தை உங்களது வட்டக்கச்சி ஊரில யாரோனும் கட்டுகின்ற போது ஒரு நாலு முட்டாள்கள் வந்து உங்களிடம் முறையிட்டால் நீங்கள் இப்படிதான் தடுத்து நிறுத்துவீர்களா? அல்லது அந்த நாலு முட்டாள்களையும் இருத்தி வைத்து தமிழ் பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற சூழ் நிலையில் சைவ ஆலயங்கள் அமைக்கப்படுவதனை வரவேற்க வேண்டும். அதுவும் ஊற்றுப்புலம் போன்ற வறுமையான கிராத்திற்கு புலம்பெயர் உறவுகள் செய்கின்ற உதவியினை கரம் கூப்பி வரவேற்கே வேண்டும். நீங்களும் உங்களுடைய பங்களிப்பையும் செலுத்தி ஆலயத்தின் ஏனைய பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று மாறாக ஆலயம் அமைப்பதனை தடுப்பது நல்லதல்ல என்று புத்திமதி கூறி அனுப்பிவீர்களா?
சாரயக் கடைகளை கண்டு களிக்கும் நீங்கள் ஆலயம் அமைப்பதனை தடுப்பது என்பது மிகப் பெரிய அநியாயம் இல்லையா?