பதிவுத்திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்த நிலையில் நுரையிரலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் சாயினி வயது 29 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home புதினங்களின் சங்கமம் ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் சாயினி யாழில் பலியானது ஏன்?





