யாழிலிருந்து எதற்காக இடமாற்றம் பெற்று ஓடினார்கள் அருமையான வைத்தியர்கள்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
யாழில் கடவுளுக்கு நிகராக வாழ்ந்த உத்தமர்கள்
#வைத்தியத்துறை பெருந்தகைகளே உங்களது தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்



பணம் & நேரம் பார்க்காது பணி புரிந்தார்கள் எனக்கு அறியாத இன்னும் பலர் உள்ளார்கள் சேவையாற்ற..
#எல்லாம் உங்கட அரசியல் தான்.
வைத்தியர் நடராஜா ஜெயக்குமாரன் & வைத்தியர் உமாபதி சேரை யாழ்ப்பாண மக்கள் கடவுளாக பார்த்தார்கள் தற்போது உமாபதி சேரையும் ஜெயக்குமாரன் சேரையும் தேடி அவர்களின் இடத்திற்கு நாம் செல்ல வேண்டியுள்ளது.
(யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒரு பெரும் பெறுமதியான பொருட்கள் களவு போயிருந்தது 2010 -2011 காலப்பகுதியில் ஜெயக்குமார் சேர் அவர்கள் பணிபுரிந்த போது அவர் களவு போனதையும் களவு எடுத்து சென்றவர்களையும் கண்டுபிடித்து வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் அப்பிடி நேர்மையான வைத்தியர்களை இடமாற்றம் செய்ய வைத்தது தான் தங்கள் திறமைகள்)
அன்று நான் பார்த்த #உமாபதி சேர் அவருடைய கிளினிக் என்றால் அந்த அவர் இருக்கும் அறையிலிருந்து 100மீற்றர் வரை மக்கள் காத்திருப்பார்கள் அந்த இடமே சனக்கூட்டத்தால் நிரம்பி வழியும் உமாபதி சேர் எங்களை பார்த்தால் தான் போவோம் என்று விடாப்பிடியாக நோயாளிகள் இருந்த காலம் இருந்தது அந்த காலத்தில் வெளி வைத்தியசாலையில் அவரை பார்ப்பதற்கு
#சனல்

(Channel) பண்ண தேவையில்லை போதனா வைத்தியசாலை சென்றால் அவருடைய வார்த்தைகள் நோயாளியை குணமாக்கும் அளவுக்கு இருக்கும் இப்போது இருந்திருந்தால் எத்தனை பேர் பயணடைந்திருப்பார்கள் என நினைக்கும் போது கவலை…..