முள்ளிவாய்க்காலில் 9 பசுமாடுகளை களவாடியவர்கள் யார்? தயவு செய்து பகிரவும்!!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் 14/07/2019 அன்று வீட்டுக் காணியில் பாதுகாப்பாக வளர்த்து வந்த 9 பசு மாடுகளை கன்றுடன் கொள்ளையர்கள் இருவர் காவலுக்கு இருந்தும் அவர்களது கண்களை கட்டி விட்டு இரவோடு இரவாக களவாடிச் சென்றுள்ளனர். குறித்த மாடுகளை வாழ்வதாரமாக நம்பி இருந்த குறித்த குடும்பத்தினர் தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். குறித்த மாடுகள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லாவிட்டா குறித்த குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அக் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். குறித்த குடும்பத்தினரின் தொலைபேசி இலக்கம் Tp=0773820746