யாழ் போதனா வைத்தியசாலையில் நடக்கும் கொடூரம்!! மனித மிருகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ
சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோப் பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்….
என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ? மனிதரா மிருகமா பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யார் இந்த தைரியத்தை வழங்கியது ?? பொதுமக்கள் சொல்வது கேட்கவில்லையானால் அடிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது ? இப்போது நடைபெற்ற செயற்பாடு உடனடி நடவடிக்கைக்காக ( மருத்துவபீட மாணவி தொலைபேசியில் வீடியோ எடுத்த போது அந்த பாதுகாப்பு பிரிவினரால் தொலைபேசி பறிக்கப்பட்டது )
போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது உறவுக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது தாக்குதலுக்குள்ளாக மனிதனுக்கு நியாயம் கிடைக்குமா??
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீண்டும் ஒரு தடவை ஊழியர்கள் தொலைபேசி பாவிக்க தடை என அறிக்கை விட்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்வார்….
தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிசாரிம் முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் விசாரணை அறிக்கை வரும்வரை நீதிமன்றம் இதற்கும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமா? யாழ் போதனா வைத்தியசாலையே இறுதி கதி என்பதால் கடைசி காலங்களில் தங்களுக்கும் ஏதாவது இசகு பிசகா செய்து போடுவாங்கள் என்டு யாழ்ப்பாணத்து நீதிதேவதைகளும் சற்று பயப்பட வேண்டி நிலையில் உள்ளன….



