புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் மாப்பிளையின் காதல் ஆக்ரோசம் தாங்க முடியாது ஓடித் தப்பிய யாழ்ப்பாண பெண் வைத்தியர்!!

லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 31வயதான இளைஞனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மணமகள் ஒரு மருத்துவர். இவர் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தென்னிலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பயிற்சி பெற்று வருகின்றார். தற்போது பெண்மருத்துவர் லண்டன் இஞ்சினியர் தனக்கு வேண்டாம் என கூறி பிரிந்துள்ளார். அதற்கு காரணம் இஞ்சினியரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லையாம். இரவில் மட்டுமல்லாது பகலிலும் தன்னை படாதபாடு படுத்துவதாகவும் வழமைக்கு மாறான முறையில் தன்னுடன் வற்புறுத்தி உறவு கொள்வதாகவும் குறித்த பெண் வைத்தியர் தனது நட்பு வட்டாரங்களுக்கு தெரிவித்துள்ளார்.  பிரிந்து நிற்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு துாது சென்ற தரப்பிடமே குறித்த பெண் வைத்தியர் தனது ஆவேசங்களை கொட்டித் தீர்த்துள்ளாராம்.

இருவரும் நல்ல ஜோடிப்பொருத்தம் என திருமண மண்டபத்தில் பலரும் ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.இருவரது புகைப்படங்களும் அழகான முறையில் குறித்த திருமணவைபவத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்பட நிறுவனத்தால் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது.தற்போது அவை எல்லாம் அத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.