நல்லுாரில் கடும் பதற்றம்!! வீதித்தடையால் பலர் மயக்கம்!! யாழ் மாநகரசபை முட்டாள் ஆணையாளர் மீது தாக்குதல் முயற்சி!!
நல்லுார் முதலாளியான முட்டாள் சயந்தன் மற்றும் முட்டாள் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரால் அப்பாவிகள் பலர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி….
வீடியோவை இங்கே அழுத்திப் பார்வையிடுங்கள்….
https://www.youtube.com/@vampannews/videos
சற்று முன் நல்லுார் வீதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று சப்பரத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லுாரில் திரண்டிருந்தனர். ஆனாலும் நல்லுார் பின் வீதியி்ல் இருந்த வீதித்தடையால் ஒருவர் மாத்திரமே நுழைவதற்கு வசதி ஏற்படுத்தி தடை விதித்திருந்தது யாழ் மாநகரசபை நிர்வாகம். பின் வீதிமட்டுமல்லாமல் நல்லுாரில் உள்ள நுழைவாயில்கள் அனைத்திலும் ஒரு சிலரே ஒரே நேரத்தில் நுழைவதற்கான ஏற்பாடுகளை யாழ் மாநகரபை ஏற்படுத்தியருந்தது. இந் நிலையில் இன்று திரண்ட அடியவர்களால் வீதியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் சன நெருக்கடியில் சிக்கி சிறுவர் சிறுமிகள் சிலர் மயக்கமடைந்துள்ளார்கள். இவர்களை வீதியை விட்டு அப்புறப்படுத்துவதற்கு வீதித்தடை பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது. அதனை அகற்ற கோரியும் மாநகரசபையினர் மறுத்துவிட்டனராம். இதனால் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பக்தர்களால் வீதித்தடை அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் மாநகரசபை ஆணையாளர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவர் அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெரிசலில் கர்பிணிப் பெண்கள் இருவர் சிக்கிய நிலையில் பின் MOH அலுவகத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர்
வீடியோவை இங்கே அழுத்திப் பார்வையிடுங்கள்….
https://www.youtube.com/@vampannews/videos
நல்லுார் முதலாளி சயந்தனின் விசர்க்கூத்துக்கு யாழ் மாநகரசபை ஆணையாளரும் உடந்தையாக இருந்து பக்தர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை ஆணையாளர் உடுவில் மகளீர் கல்லுாரியில் ரீச்சராக இருந்தவர். முன்னாள் கலாச்சார அமைச்சராக இருந்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரனின் பரிந்துரையினாலேயே அவர் நிர்வாகசேவைக்குள் உள்வாங்கப்பட்டவர். நல்லுார் முதலாளி சயந்தனும் கட்டடகலைஞரே தவிர மக்களை எவ்வாறு நிர்வகிக்கவேண்டும் என்பது தொடர்பாக துளியும் அறிவில்லாத ஒருவர். நல்லுார் முதலாளியான சயந்தனை அவரது அல்லக்கைகள் முருகப் பெருமானிலும் விட உயர்ந்தவர் என்ற ரீதியில் கருதி வருவதாகவும் அதனால் அவர் தனது முட்டாள் தனமான பல செயற்பாடுகளை துணிந்து செய்து வருவதாகவும் பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளன. நல்லுார் மேற்கு வீதி முற்றாக மூடி அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்கர்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நல்லுார் முதலாளி சயந்தனின் விசர்த்தனமே இதற்கு காரணம் என தெரியவருகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்தில் செக்குறிட்டியாக இருந்து ஓய்வு பெற்ற நல்லுார் நாட்டாமை என அழைக்கப்படும் கோமாளி ஒருவரும் இவர்களுடன் சேர்ந்து திரிந்து பக்தர்களை குழப்பியடிக்கும் வேலைகளைச் செய்து கொண்டுள்ளார்கள். நல்லுார் முருகன் வீதியுலா வரும் போது சிவப்பு கயிறை இருபக்கமும் குறிப்பிட்ட துாரம் வரை கொண்டு சென்று அந்தக் கயிற்றுக்குள் ஒருவரையும் செல்லவிடாது தடுப்பதனால் நல்லுார் பின்வீதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகின்றது.
சன நெருக்கத்தைப் பயன்படுத்தி காமுகர்களும் பெண்களுடன் சேட்டைகள் விட்டதாகவும் தெரியவருகின்றது. இதற்கு முழுப்பொறுப்பை முட்டாள் ஆணையாளரும் நல்லுார் முதலாளியான முட்டாள் சயந்தனும் பொறுப்பேற்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.