பிரான்ஸ் குடும்பி ஜெயாவுக்கு மலத்தால் குளிப்பாட்டிய அருன்சித்தார்த், மனைவி உட்பட 5 பேர் சிறைக்குள் அடைப்பு!!
யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் என தன்னைத் தானே கூறி செயற்படும் அரச புலனாய்வு உதவியாளனான அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரான்ஸ் குடும்பி ஜெயாவின் லக்ஸ் ஹோட்டல் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டு, உரிமையாளர் மீதும் மலம் மற்றும் சாணி கலந்த தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டனர். இத் தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பி ஜெயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மணைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் பால் ஊட்டும் தாயார் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கிய நீதிமன்று ஏனைய ஐவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது.
குடும்பி ஜெயாவின் லக்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திய பின் ஜெயாவின் வைப்பாட்டியாக இருந்த சித்தார்த்தின் மனைவியின் தங்கையான தர்சி குடும்பி ஜெயாவைப் பிடித்து மலம் மற்றும் சாணி கலந்த தண்ணீரால் குளிப்பாட்டிய பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தாள். நேற்று சித்தார்த் , மனைவி உட்பட்டவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னர் சித்தார்த்தின் பேஸ்புக்கை இயக்கும் அரச புலனாய்வாளர்களால் குடும்பி ஜெயாவின் இந்த புகைப்படம் சித்தார்ததின் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்களத்தில் அறிக்கையும் விடப்பட்டுள்ளது.




