புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சர்மா ஐயா ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்தார்!!

யாழ் சுன்னாகத்தில் இன்று காலை ரயிலில் பாய்ந்து 80 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக்கல்லுாரியின் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். சர்மா ஐயா என அனைவராலும் இவர் அழைக்கப்படுபவர். அந்தக் காலத்திலேயே கணனி மற்றும் தட்டெழுத்து போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்றவர ஆசிரியராக இவர் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் துறைத்தலைவர்; சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. சிவசண்முகராஜா அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது உயிர்மாய்ப்புத் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.