புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் யாழ்ப்பாண டிலக்சனாவையும் அம்மாவையும் கொன்றவன் பிடிபட்டான்!! (Video)

பிரான்ஸ் நாட்டில் இரட்டை கொலை வழக்கில் இலங்கை நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (வயது-51) மற்றும் இராஜதுரை டிலக்சனா (வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தேடி பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் இரு மகன்களும் பொந்துவாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிந்தார்கள்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில மரபணு சான்றுகளை சேகரித்து, குற்றவாளியை தேடி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை (18-01-2023) Rennes (Ille-et-Vilaine) நகரில் வைத்து 27 வயதுடைய இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கும் காவல்துறையினர் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், சந்தேகநபர் அதனை மறுத்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 வீடியோவிற்கு இந்த இணைப்பை அழுத்தி SUBSCRIBE செய்த பின்னர் பார்வையிடலாம்