புதினங்களின் சங்கமம்

யாழ் நெல்லியடியில் பெண் அரச உத்தியோகத்தரின் சங்கிலியைத் திருடிய ”மாம்பழத்திற்கும்” நண்பனுக்கும் நடந்த கதி!!

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரின் 2 பவுண் சங்கிலியை அறுத்த இரண்டு பேர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி வேலையிலிருந்து வீடு திரும்பிய பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து சென்றுள்ளனர்.

சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டு, திருடர்கள் இனம் காணப்பட்டனர்.

சாவகச்சேரியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் சாவகச்சேரியை சேர்ந்த மாம்பழம் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞன் கைதாகினான்.

மற்றைய திருடன் இன்று நெல்லியடி பொலிசாரிடம் சரணடைந்தான்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தைப்பொங்கல் செலவிற்காக சங்கிலி அறுத்ததாக தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட சங்கிலியை ஒரு இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்ததாக தெரிவித்தனர்.

நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு திருட்டுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிசார் சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.