யாழில் பெண்களுடன் சேட்டை விட்டவர்கள் பொலிசாரால் துரத்திப் பிடிக்கப்பட்ட காட்சிகள்!! (Video)
யாழ் – பருத்தித்துறை நகர் பகுதியில் காவல்துறையினரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலைமையிலான குழுவே குறித்த 13 பேரையும் கைது செய்து எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.



