புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி மகாவித்தியாலய பெண் அதிபர் தாக்கி மாணவனின் செவிப்பறை கிழிந்தது? தாக்கியது ஏன்?

கிளிநொச்சியில் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபராவ் தாக்கப்பட்ட
தரம் எட்டு மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
சனிக் கிழமை காலை பாடசாலையின் காலை ஆராதனையின் போது ஒலி பெருக்கியில்
மாணவனை அழைத்த அதிபர் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் சிறுவர் இல்ல
பேரூந்தில் நீ வரக் கூடாது எனத் தெரிவித்து கன்னத்தில் அறைந்துள்ளார் என
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தமது இருப்பிடத்திலிருந்தே சிறுவர் இல்லம்
ஒன்றுக்கு சொந்தமான சிற்றூர்தி ஒன்று சிறுவர் இல்ல மாணவர்களை
பாடசாலைக்கு தினமும் எற்றி செல்வது வழக்கம் எனவே எனது மகனை நான் அதில்
ஏற்றி அனுப்புவது வழக்கம். ஆனால் பாடசாலை அதிபர் எனது மகனை சிறுவர் இல்ல
பேரூந்தில் வரக் கூடாது எனக்கூறியுள்ளார். ஆனால் எனது மகனை தினமும்
குறித்த பேரூந்தில் அனுப்புவது பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில்
எனக்கு நன்மையாக இருந்தது. இதனால் நான் தொடர்ந்தும் குறித்த பேரூந்தில்
அனுப்பியிருந்தேன்.
இதன்காரணமாக காலை ஆராதனையில் தான் சொல்லியும் கேட்கவில்லை என்ற
காரணத்தினால் எனது மகனை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அதிபர்
கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான வலி
காரணமாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு சிகிச்சைக்காக
விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனத் தெரிவித்தார்.