புதினங்களின் சங்கமம்

யாழில் 17 வயதான லக்சாயினிக்கு நடந்தது என்ன? பொலிசார் தீவிர விசாரணை!

யாழில் 17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி (17) எனும் சிறுமி நாடகமும் அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்காக பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.