கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாண தமிழருக்கு அடித்த அதிஷ்டம்!!
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாண தமிழருக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
54 வயதுடைய இந்த தமிழர் லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலரை வென்றுள்ளார்.
ஜீவகுமார் சிவபாதம் என்பவரே கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றவராவார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், அந்தப் பணத்தில் கார் கொள்வனவு செய்துள்ளதுடன் தனது பிள்ளைகளின் கல்விக்காக பணத்தை செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

