புதினங்களின் சங்கமம்

யார் இந்த நபர்? யாழ் – பண்ணை பகுதியில் சடலமாக! (Photos)

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் (6) மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காகச் சென்ற போது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.

இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் பார்வையிட்டுள்ளார்.

குறித்த முதியவர் தீவகப் பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றது.