Vampan memesபுதினங்களின் சங்கமம்

கோப்பாய் பெற்றோல் நிலையத்தில் அரச ஊழியர்களை ஆம்பிளைகள் பொம்பிளைகள் என பிரித்து விளையாட்டு!! பெண் பிரதேச செயலாளர் நடவடிக்கை!! (Photos)

கைதடியில் உள்ள வடமாகாண தலைமை அலுவலகங்கள் உட்பட்ட பல அலுவலகங்களுக்கு இன்று கோப்பாய் பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அங்கு பெற்றோல் அடிக்க வந்துள்ள அரச அலுவலர்களை ஆண்கள் மற்றும் பெண்களாக தனித்தனியாக பிரித்து பெற்றோல் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கோப்பாய் பெண் பிரதேசசெயலாளர் இந்த ஒழுங்கை மேற்கொண்டுள்ளார்,

பல நுாற்றுக்கணக்கான அரச ஊழியர்கள் நிற்கும் இவ்வேளையில் இரவுவரை விநியோகம் தொடரும் என்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆண் அரச ஊழியர்கள் சிலவேளை பெண்கள் மீது அத்துமீறலாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு கோப்பாய் பிரதேசசெயலாளர் செயற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.ஆனாலும் பிரதேசசெயலரான அந்த பெண்மணி அரச உத்தியோகத்தர்கள் அல்லாத ஏனைய பெண்கள் வரிசையில் நின்று பெற்றோல் பெற்றுக் கொள்வதை ஏன் கவனிக்கத்தவறினார்? அவர் அரச ஊழியர்கள் அல்லாத யாழ்ப்பாண ஆண்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாரா?? அல்லது அவர்கள் கண்ணியமானவர்கள், ஆனால் அரச ஊழியர்கள் அலங்கோலம் பிடித்தவர்கள் என கருதுகின்றாரா??

இருப்பினும் பெண் பிரதேசசெயலாளரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும் பல அலுவலகங்களில் பாய்ச்சல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் வடக்கு மாகாண தலைமைச் செயலக பெண் ஊழியரான இரு பிள்ளைகளின் தாய் பிரபல ஆரம்பபாடசாலை ஆசிரியரான இரு பிள்ளைகளின் ஆணுடன் ஓடியுள்ளார். இன்னும் அலுவலகத்துக்கு சமூகமளிக்கவில்லை. அத்துடன் வடக்கு மாகாண அலுவலகம் ஒன்றில் ஓவர்டைம் வேலை செய்ய சென்ற குடும்பப் பெண் ஒருவர் அந்த அலுவலக அதிகாரியுடன் அலுவலகத்திலேயே லீலைகள் புரிந்தது பலருக்கும் தெரிந்த விடயம்.

கோப்பாய் பெண் பிரதேசசெயலாளருக்கு ஒரு சிறிய அட்வைஸ்…… ஊசி இடம் கொடுக்காமல் நுால் நுளை முடியாது….. அத்துடன் தற்போது ஊசியே நுலைத் தேடி அலைவதாகவும் அறிய முடிகின்றது.